உதவி - சுகந்தி



அம்மா எனக்கு டிவியில் பார்த்தோமே அந்த விளையாட்டு பொம்மையை வாங்கித் தருகிறீர்களா? அம்மாவின் அருகில் போய் நின்றாள் ப்ரியா.
.அவள் டிவியில் பார்த்த அந்த பொம்மை அவ்வளவு அழகாக இருந்தது. அதை வைத்துக் கொண்டு இந்த அரையாண்டு பரிட்சை முடிவில் எப்படி பக்கத்து வீட்டு அனிதாவுடன் எப்படி விளையாடலாம் என்று கனவு காண ஆரம்பித்தாள் ப்ரியா.

ப்ரியா பரிட்சை சமயத்தில் இப்படி மசமசன்னு நிக்காதே சாப்பிட்டு ஸ்கூலுக்கு கிளம்பற வழியைப் பாரு அம்மா அதட்டினார்

அம்மா அந்த பொம்மைம்மா நாளைக்கு வாங்கித் தருவீங்களா எனக்கு அதை வைத்து விளையாட ரொம்ப ஆசையா இருக்கும்மா என்றாள் ப்ரியா

ப்ரியாக் குட்டி அம்மா சொல்கிறேன் என்ரு கோபித்துக் கொள்ளாதே நீ கேட்கும் பொம்மையின் விலை என்ன என்று உனக்குத் தெரியுமா?

அம்மா சொல்ல வந்தது ப்ரியாவிற்குப் புரிய்வைல்லை

ஓ தெரியுமே ரூ 350 மட்டுமே என்று சொல்லித் தானே டிவியில் விளம்பரம் செய்கிறார்கள். உற்சாகமாக சொன்னாள் ப்ரியா

அம்மா தலையைச் சாய்த்து புன்னகைத்தாள் ப்பூ இவ்வளவு தானா? அப்படின்னா நீயே வாங்கிக் கொள்ளலாமே? என்றார்

நானா? என் கிட்ட அவ்வளவு காசு எங்கேம்மா?

அது தான் உண்டியலில் காசு சேர்த்து வைத்து இருக்கிறாயே அதில் வாங்கிக் கொள் என்றார் அம்மா

அம்மா என்னிடம் இருநூறு ரூபாய் தான் இருக்கிறது. இன்னும் நூற்றைம்பது ரூபாய் எனக்கு எப்படிக் கிடைக்கும்? நீங்களே எனக்கு வாங்கிக் கொடுங்கள் அம்மா ப்ளீஸ் தாயைக் கொஞ்சினாள் ப்ரியா

ப்ரியா குட்டி உனக்கு போன மாதம் தான் பிறந்த நாளுக்க்கு நீ கேட்டாய் என்று வீடியோ கேம்ஸ் அப்பா வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் அதை நீ எப்படிப் பொறுப்பில்லாமல் போட்டிருக்கிறாய் பார் உன் காசை செலவு செய்து நீ வாங்கினால் தான் பொருளின் அருமை உனக்குத் தெரியும் பணம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதும் புரியும் அம்மா ப்ரியாவிற்கு அன்பாக விளக்கம் கொடுத்தார்

சோகத்தோடு தலையைத் தொங்கப் போட்டாள் ப்ரியா. அவளது தோள்கள் தொய்ந்தன. பொம்மை என்று எவ்வளவு ஆசையாய் இருந்தாள். அம்மா அவளின் ஆசையைப் புரிந்து கொள்ள வில்லையே அம்மாவின் மேல் கோபம் வந்தது ப்ரியாவிற்கு

கிளம்பு ப்ரியா எனக்கும் லேட்டாகி விட்டது அம்மா சொல்ல தொங்கிய முகத்தோடு பள்ளி செல்ல அம்மாவின் ஸ்கூட்டியில் ஏறினாள்.

பள்ளியில் தமிழ் ஆசிரியை பரிட்சைக்கு வரும் செய்யுள்களில் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார். ப்ரியாவின் கவனமோ பொம்மையின் மேல் தான் இருந்தது. தன் செல்லப் பெண்ணுக்காக அம்மா செலவு செய்ய மறுக்கிறார்களே என்றுத் தவிப்பாய் இருந்தது.

அப்போது தலைமை ஆசிரியை அங்கு வந்தார். தலைமை ஆசிரியரைப் பார்த்ததும் வகுப்பே அமைதியானது. கமலா மேடம் ஒரு நிமிடம் உங்கள் வகுப்பில் இருக்கும் கார்த்தியை கொஞ்சம் வெளியே வரச் சொல்லுங்கள் என்றார் ஆசிரியை தலை அசைக்க கார்த்தி பயந்து கொண்டே வெளியே வந்தாள். கார்த்தியைப் பற்றி வகுப்பில் உள்ள எல்லோருக்கும் தெரியும். அவளின் பெற்றோர் கட்டிட வேலை செய்பவர்கள். ப்ரியாவே கார்த்தியின் அம்மா கட்ட்டம் கட்டும் இடங்களில் வேலை செய்வதை பார்த்திருக்கிறாள்.

தலைமை ஆசிரியை கார்த்தியைத் திட்டிக் கொண்டிருந்தார். நீ இன்னும் பரிட்சைக்குப் பணம் கட்டவில்லை தெரியும் தானே

ஆமாம் என்று தலையாட்டினாள் கார்த்தி

ஏன் இன்னும் கட்டவில்லை கெடு முடிந்து இரண்டு நாளாகி விட்டது பரிட்ச்சை எழுதப் போகிறாயா இல்லையா?

குனிந்த தலையோடு அவமானத்துடன் நின்றிருந்தாள் கார்த்தி.

சொல் ஏன் இன்னும் பணம் கொண்டு வரவில்லை கோபமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர்

மறந்து விட்டேன் அம்மா மெல்லிய குரலில் பதிலளித்தாள் கார்த்தி.

மறந்து விட்டாயா? என்ன பொறுப்பினமை. உன் பெற்றோர் எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள் என்று தெரிந்திருந்தும் நீ இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாயே என்ற தலைமை ஆசிரியர். நீ இன்று முழுவதும் வெளியே நின்றே பாடம் கேள் அப்போது தான் நாளை உனக்கு மறக்காது. என்று கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் தலைமை ஆசிரியர்.

பள்ளி முடியும் வரையில் வெயிலில் வெளியே நின்று கொண்டிருந்த கார்த்தியைப் பார்க்க பாவமாக இருந்தது ப்ரியாவிற்கு. மற்ற குழந்தைகளைப் போல் அவள் கார்த்தியைக் கிண்டல் செய்யவில்லை மாலையில் தன்னை அழைக்க வந்த தாயிடம் நடந்ததைச் சொல்லி. அம்மா நாம் இன்று கார்த்தியை வழியில் இறக்கி விட்டு விடலாம். பாவம்மா அவ்ள் இன்று முழுவதும் நின்று கொண்டேயிருந்தாள் கால் வலிக்கும் என்றால் ப்ரியா. தாய்ம் சம்மதிக்கவே இருவரும்ஸ்கூட்டியில் தாயுடன் பயணம் செய்தனர். காற்று வேகமாக முகத்தில் மோத கார்த்தி சந்தோஷமாய் சிரிப்பதைப் பார்த்த ப்ரியாவிற்கும் சந்தோஷமாக இருந்தது. கார்த்தியின் பெற்றோர் வேலை செய்யும் இடத்தில் வண்டியை நிறுத்திய ப்ரியாவின் தாயார். கார்த்தியின் தாயிடம் விஷயத்தைச் சொன்னார்

அட எம்புள்ள மறக்கலம்மா எங்க கையில தான் துட்டு இல்லை. என்னாத்தைப் பண்றது? ஏழைங்க நாங்க புள்ளையை படிக்க வைக்கணுன்னு ஆசைப் படுறோம் ஆனா கையில் காசு இல்லையே அங்கலாய்த்தார் கார்த்தியின் அம்மா

கேட்டுக் கொண்டிருந்த ப்ரியாவிற்கு மனம் மிகவும் வருத்தமாக இருந்தது. கார்த்திக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று எண்ணினாள். அம்மாவின் காதில் தனக்குத் தோன்றியதை சொன்னாள். ஆச்சிரியமாக புருவத்தைத் தூக்கிய அம்மா அவள் சொன்னதிற்கு சம்மதித்தாள். உடனே இருவரும் வீட்டிற்கு சென்றார்கள் ப்ரியாவின் உண்டியலை அவள் எடுத்துக் கொள்ள இருவரும் கட்டட வேலை நடக்கும் இடத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

ப்ரியா தன் உண்டியலை கார்த்தியிடம் நீட்டினாள். கார்த்தி இதில் இருநூறு ரூபாய் இருக்கிறது. இதை நீ பரிட்ச்சைக்குப் பணம் கட்ட வைத்துக் கொள் என்று சொல்லிக் கொடுத்தாள்.தயக்கத்துடன் கார்த்தி அதை வாங்கிக் கொண்டாள்.

அதைப் பார்த்த அவள் தாய் இல்லைம்மா எங்களுக்குப் பிச்சை வேண்டாம். எப்படியும் பணம் கட்ட முடியாமல் இவள் படிப்பு நின்றுத் தான் போகும். அது எப்போது நின்று போனால் என்ன? நாளையே இவள் படிக்கப் போக வேண்டாம். எங்களோடு வேலை செய்தாலாவது கூலியாவது கிடைக்கும்.என்று வருத்தத்தோடு சொன்னார்

உடனே ப்ரியா இல்லைஆண்ட்டி இது நான் என் தோழி கார்த்திக்கு நான் கொடுக்கும் அன்பளிப்பாக எடுத்துக் கொள்ளுங்க்ள். அவள் படிப்பை நிறுத்தவேண்டாம் ப்ளீஸ் என்று கெஞ்ச அநதம்மாவும் ப்ரியா கொடுத்த பணத்தை மனம் இல்லாமல் வாங்கிக் கொண்டாள்.

ப்ரியா அதோடு நிற்கவில்லை மறுநாள் தலைமை ஆசிரியரை சந்தித்துப் பேசினாள் அம்மா கார்த்தியின் பெற்றோர்வசதியில் குறைந்தவர்கள் அவர்களால் அவள் படிப்பிற்கு பணம் கட்ட முடியாது. எனவே அவளுக்கு என்னால் ஆன உதவியைச் செய்யப் போகிறேன்.என்று தைரியமாக சொன்னாள்.

ப்ரியாவை ஆழமாக பார்த்த தலைமை ஆசிரியை யோசித்துத் தான் பேசுகிறாயா ப்ரியா ஒரு பெண்ணை படிக்க வைப்பதற்கான செலவு எவ்வளவு என்று உனக்குத் தெரியுமா? அது சிறு பிள்ளை உன்னால் முடியுமா? என்று கிண்டலாகக் கேட்டார்.

உடனே ப்ரியா அம்மா என்னால் முடிந்து தான் ஆக வேண்டும். என்னால் முடிந்த் அளவு கார்த்திக்கு உதவி செய்வேன். அந்தக் கடமை எனக்கு இருக்கிறது என்றாள்.

அது என்னம்மா கடமை? கார்த்தியின் பெற்றோருக்கு இல்லாத கடமை மீண்டும் எகத்தாளமாகவே கேட்டார். தலமை ஆசிரியை கார்த்தி நல்ல முறையில் படிக்க முடியாவிட்டால் அவள் ஒரு குழந்தைத் தொழிலாளியாக ஆக வாய்ப்பு இருக்கிறது என்பதை என் தந்தை எனக்கு புரிய வைத்தார். ஒரு தோழி என்ற முறையில் அதை என்னால் முடிந்த அளவு தடுக்க வேண்டியக் கடமை எனக்கு இருக்கிறது குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலத்தின் தூண்கள் என்று நீங்கள் தானே அன்று சொன்னீர்கள். கார்த்தி நல்ல முறையில் படித்தால் எதிர்காலத்தில் நம் நாட்டிற்கும் நல்லது தானே. என்றாள் ப்ரியா

ப்ரியா பேசுவதையேக் கேட்டுக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் அதற்குத் தேவையான பணத்திற்கு எங்கே போவாய்?

யோசித்துப் பார்த்தால் ஒருவருக்கு நல்ல வழியில் பயன் படுத்தும் பணத்தை நான் எப்படி எல்லாம் வீணாக்குகிறேன் என்றும் புரிந்து கொண்டேன்.நான் எனக்காக வீணாய் செய்யும் செலவுகளை எல்லாம் நிறுத்தி அந்தப் பணத்தை சேமிக்கப் போகிறேன். அது போல மற்ற மாணவர்களையும் செய்யத் தூண்ட வேண்டும். அதற்குத் தான் எனக்கு உங்கள் உதவித் தேவைப்படுகிறது.

தெளிவாய்ப் பேசும் ப்ரியாவைப் பார்த்த தலைமை ஆசிரியர் அவளை மதிப்புடன் பேசினார் நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்

நான் இங்கே கார்த்தியின் பெயரில் ஒரு அட்டைப் பெட்டியை வைக்க வேண்டும். அதில் பள்ளி மாணவர்கள் தங்களின் பழைய நோட்டு புத்தகங்கள், எழுதி வீணாக்கப்பட்ட காகிதங்கள். எல்லாவற்றையும் போட்டு வைத்தால், கார்த்தி அவறறை பழைய செய்தித் தாள் கடையில் விற்று அதை தன் படிப்பிற்குப் பயன் படுத்தலாம். மற்ற வகையில் கார்த்திக்கு உதவவும் மாணவர்களை இது தூண்டும் கார்த்தியின் பெற்றோருக்கும் பண சிரமம் குறையும் என்று தன் மனதில் இருந்த திட்டத்தைத் தலைமை ஆசிரியருக்கு விளக்கினாள் ப்ரியா.

அவளுடைய தீர்க்கமான யோசனையைக் கேட்ட தலைமை ஆசிரியர் அவளை மெச்சினார்

ப்ரியா நீ எதிர்காலத்தில் ஒரு நல்ல தலைவியாக வருவாய் என்று நினைக்கிறேன். உன் கருத்துக்களுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். நீ சொல்வதும் சரிதான் குழந்தைத் தொழிலாளிகள் இல்லாத நிலை நம் நாட்டில் கண்டிப்பாக வர வேண்டும். அதனால் உன் இந்த சிறிய முயற்சி வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். நானும் என்ன முறையில் கார்த்திக்கு உதவ முடியும் என்று பார்க்கிறேன் என்று உறுதி அளித்தார்.

ப்ரியா சந்தோஷமாக வெளியே ஓடினாள். இந்த விடுமுறைக்கு விளையாட பொம்மைக்கு பதில் ஒரு நல்ல தோழி கிடைத்தாள்.

குழந்தைகளே நீங்களும் ப்ரியாவைப் போல சுய சிந்தனையோடு நீங்களும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தோடு செயல் படுங்கள்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home